தமிழ் சினிமாவில் விஜய்யின் ‘பத்ரி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூமிகா. இப்படம் அவருக்கு பெரும் அளவில் வரவேற்பை கொடுத்தது. அதைத்தொடர்ந்து ஸ்ரீ காந்த், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பூமிகா தமிழில் படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழில், ‘கொலையுதிர் காலம்’ என்னும் படத்தில் பூமிகா இறுதியாக நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என பிறமொழி படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ‘தோனி’யின் வாழ்க்கை சுயசரிதை திரைப்படத்தில் தோனியின் சகோதரியாக நடித்து அனைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஒரு காலத்தில் கதாநாயகியாக வந்த பூமிகா தற்போது பட வாய்ப்புகள் எதும் வராதால் குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூமிகா அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் பூமிகா கறுப்பு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.