திரைத்துறையில் முன்னணி இடத்தை தக்க வைத்துக்கொள்ள நடிகைகள் பலர் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதை சில பொதுப்படையாக ஒப்புக்கொண்டு வருகின்றனர். முதலில் பாலிவுட்டில் இருந்த இக்கலாச்சராமானது தற்போது தென்னிந்திய திரைத்துறை நடிகைகளிடமும் பரவதொடங்கியுள்ளது.

தமிழில் முன்னணியாக வலம் வரும் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தங்களது அழகை மெழுக்கேற்றி வருகின்றனர். அந்தவகையில், இளம் நடிகை அதுல்யா ரவி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பேசி வருகின்றனர்.
கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட அதுல்யா ரவிக்கு சமூகவலைதளத்தில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். ”காதல் கண்கட்டுதே’ என்னும் படத்தின் மூலம் நடிகையாக தமிழில் சினிமாவில் அறிமுகமான அதுல்யா அதன் பின், ‘நாடோடி-2’, ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’, உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

‘ஏமாளி’ என்னும் படத்தில் அதுல்யா கவர்ச்சி வேடங்களில் நடித்தார். அதுவரை குடும்ப பெண்ணாக பார்த்த அதுல்யாவை கவர்ச்சி வேடத்தில் நடித்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்துப்பேனார்கள். மேலும் கவர்ச்சி வேடத்தில் நடிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர்.

ரசிகர்களின் ஆசைக்கு இணங்க இனி கவர்ச்சி வேடத்தில் நடிக்க மாட்டேன் எனவும் அதுல்யா கூறினார். இந்த நிலையில், சமீபத்தில் வெளியான ‘முருங்கைகாய் சிப்ஸ்’ என்னும் படத்தில் ஷாந்தனுவுடன் இணைந்து அதுல்யா நடித்தார். இதில் இரட்டை வசனங்கள் பேசுவது, முதலிரவு காட்சி என அதுல்யா தூள் கிளப்பினார். இதைப்பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போனார்கள். மேலும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள், உங்கள் மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஸ்ரீ தேவி, ஷ்ருதிஹாசன், நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பிரபலங்கள் மூக்கு, முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது குறிப்பிடத்தக்கது.