தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முக தன்மையுடன் விளங்கி வருபவர் ஆண்ட்ரியா. இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் ஆண்ட்ரியா நடிகையாக அறிமுகமானர்.

ஆண்ட்ரியா கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஆண்ட்ரியா நடிப்பில், ‘நோ என்ட்ரி’, ‘மாளிகை’, ‘பிசாசு 2’, ‘வட்டம்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது. அதிலும் ‘பிசாசு 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். மேலும் இப்படத்தை மிஸ்கின் இயக்கியுள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியாவை ஏராளமானோர் பின் தொடர்கின்றனர். இதில் அவர் அவ்வப்போது தான் அடுத்து நடிக்கும் படங்கள், மியூசிக் ஷோ, புகைப்படங்கள் குறித்தான அப்டேட்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கவர்ச்சிக்கு குறைவைக்காமல் புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதை குளிர வைப்பது ஆண்ட்ரியாவுக்கு கைவந்த கலையாகும்.

இந்நிலையில், ஆண்ட்ரியா தற்போது பாத்டப்பில் நுரைகளின் மத்தியில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்தபுகைப்படங்களுக்கு தற்போது நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.