பிக் பாஸ் சீசன் 5ல் பல மாடர்ன் போட்டியாளர்களுக்கு மத்தியில், ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து வந்து மக்களின் பேராதரவோடு இறுதி வாரத்திற்கு முந்தைய வாரம் வரை நிகழ்ச்சியில் இருந்தவர் தாமரை செல்வி. நாடக கலைஞ்சரான இவருக்கு பலர்தரப்பட்ட மக்களும் தங்கள் ஆதரவை வாரி வழங்கினார். நடிகர் கமல்ஹாசன் கூட, இவர் இறுதி வாரம் வரை வருவார் என்று எண்ணி இருந்ததாக கூறி இருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்த சமயத்தில், அங்குள்ள பல பொருட்களை பார்த்து, இது எங்கள் வீட்டில் இல்லையே என்று தாமரை செல்வி கூறியதை நாம் கேட்டோம். ஆனால் தற்போது அவர் ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தும் அவருடைய வீடு தேடி சென்றுள்ளது.
தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டில் உள்ள தாமரை, பிக் பாஸிற்கு பிறகு தனது வாழ்வில் ஏற்பட்ட பலவகையான மாற்றங்கள் குறித்தும் அவ்வவ்போது கூறி வருகிறார். அதில் ஒன்றாக தான் ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தும் தற்போது தனக்கு கிடைத்தது பற்றியும் கூறியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5ல், தாமரைக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாக அக்ஷரா மற்றும் வரும் இருந்தனர். அதில் தாப்ரோது வருண் அவர்கள், தாமரை ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தையும் அவருக்கு வாங்கி கொடுத்துள்ளார்.
#BBUltimate #BiggBossTamil #BiggBossTamilOTT #thamarai #varun
varun is a good hearted person pic.twitter.com/BiIbTSR2AG— jaya suriya s (@jayasuriyas21) January 31, 2022
இதுகுறித்து தாமரை கூறுகையில், வெளியே சென்ற பிறகு நான் நிறைய ஜெயித்தேன். வருண் எனக்கு டபுள் பிரிட்ஜ், ஓவன் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்தார். அதை நான் இங்கிருக்கும்போது அவரிடம் கேட்டிருந்தேன். அதை நியாபகம் வைத்துக்கொண்டு அவர் வாங்கிக்கொடுத்தார் என்று எதார்த்தமாக கூறியுள்ளார்.