சினிமாவில் பட வாய்ப்புகள் குறையும் பொழுது சின்னத்திரை சீரியல்களில் நடித்து சரியான வாய்ப்பு வரும்போது திரைப்படத்திற்கு செல்வது தான் பலரின் வழக்கமாக இருந்தது. ஆனால் இப்பொழுது பார்த்தோம் என்றால் முதலில் சின்னத்திரையில் நடித்து அதன் வெற்றிக்கு பின்னர் பெரிய திரைக்கு செல்லும் போக்கு நிலவி வருகிறது. அவ்வாறு சின்னத்திரை நயன்தாரா என்று சொல்லப்படும் வாணிபூஜன் அவர்களும் முதலில் தமிழ் சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்து அதன் பின்னர் தான் தற்போது படங்களில் நடித்து வருகின்றார்.

தமிழில் நாட்டும் அல்லாமல் இவர் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ‘மீக்கு மாத்திரமே செப்தா’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர், அதன் பிறகு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் மகான் படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் வாணிபூஜன். இவர் நடித்த டூ மலேசியா அம்னீசியா என்ற திரைப்படம் மக்களிடையே மிகவும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. காமெடி கலந்த அந்த படத்தில் லீட் ரோலில் அவர் நடித்திருந்தது குறிப்பிட தக்கது.
ஊட்டியில் பழங்குடி இனத்தில் பிறந்த வாணி போஜன் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து அதற்குப் பின்னர்தான் மாடலிங்கில் நுழைந்தார். இதன்பிறகு அவர் சென்னையில் குடியேறினாரி தனது மாடலிங்கை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் பொழுதுதான் சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு சன் டிவியில் வெளியான ஒரு பிரபல தொடரில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வாணி போஜனுக்கு கிடைத்தது.

பிறகு ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இவரின் அழகான பேச்சும், துடிப்பான நடிப்பும் ரசிகர்கள் மனதில் சிறந்த இடத்தைப் பிடித்தது. எனவே இவர் அனைவராலும் சின்னத்திரை நயன்தாரா என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
அடுத்ததாக தமிழில் வெளியான ஓ மை கடவுளே மற்றும் ட்ரிபிள்ஸ் எனும் வெப் சீரியஸிலும் இவர் நடித்திருந்தார். இந்த இரண்டிலும் வாணிபூஜனின் நடிப்பு அனைவராலும் பேசப்படும் வகையில் இருந்திருக்கிறது. தற்போது வெளிவந்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்திலும் இவரை நாம் காணலாம். இதற்கிடையில் பல போட்டோ ஷூட்களை செய்துவரும் வாணிபோஜன் தற்போது அவர் புதியதாக எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட்டின் படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் மிகவும் கவர்ச்சியாகவும், அழகாகவும் முன்னணி கதாநாயகிகளை மிஞ்சும் அளவிற்கு மிகவும் நேர்த்தியான உடகளுடனும் போஸ் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவரின் அழகில் ஆடிப் போய் இருக்கிறார்கள். பெண் ரசிகைகளும் கூட இவரின் அழகை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.