தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் அவர்கள் பல படங்களில் தனது சிறந்த நடிப்பு திறனை வெளிக் காண்பித்துள்ளார். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துவருகிறது. இந்த சூழ்நிலையில் இறுதியாக வெளிவந்த இவருடைய படங்களில் அருண் விஜய் மாபியா கூட்டத்தின் தலைவர் மற்றும் வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்துருந்தார்.

ஆரம்பகாலத்தில் அருண் விஜய் அவர்கள் ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தார். எனினும் அவர் எதிர்பார்த்த அளவிற்கான வரவேற்பு தமிழ் மக்களின் மத்தியில் கிடைக்கவில்லை. அதோடு பெரும்பாலான முன்னணி இயக்குனர்களின் பட வாய்ப்புகளும் வரவில்லை. இந்த நிலையில் தான் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லன் கேரக்டரை எடுத்து நடிக்க முடிவு செய்தார் அருண் விஜய். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஏராளமான பட வாய்ப்புகள் அருண்விஜய்யை தேடி வந்தன. இதனால் மீண்டும் அவர் ஹீரோ அவதாரம் எடுத்தார்.
தற்போதும் அவர் கையில் யானை, பாக்ஸர், டாக் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் அருண் விஜயின் நடிப்பில் எப்போதோ உருவான படம் ஒன்றை தற்போது வெளியிட போவதாக கூறி உள்ளார்கள். 2014ஆம் ஆண்டு உருவான இப்படம் பல ஆண்டுகளாக திரைக்கு வராமல் இருந்த நிலையில் தற்போது தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். இந்த படம் “வா டீல்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த ரெக்க, ஜீவா ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் சத்யசிவா தான் அருண் விஜய்யின் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கார்த்திகா நாயர் நடித்துள்ளார்.

கார்த்திகா நாயர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் நடிகை ராதாவின் மூத்த மகள் ஆவார். கார்த்திகா 2009ஆம் ஆண்டு ஜோஷ் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இதையும் பாருங்கள்: ரஜினியின் சந்திரமுகி படத்தில் நடித்திருந்த சாமியார் அவர்களை ஞாபகமிருக்கிறதா? அவரது மனைவியும் ஒரு சிறந்த நடிகை தான். அவர் யார் என்று தெரியுமா?
2011 ஆம் ஆண்டு கோ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த்திரையிலும் அறிமுகமானார். அந்த படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. எனினும் அவர் நடித்த வேறு எந்த படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் வெளியாக இருக்கும் அருண் விஜயின் இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 7 வருடத்திற்கு பிறகு வெளியாகும் இந்த திரைப்படத்தின் காட்சிகள் இந்த தீபாவளிக்கு விருந்தளித்தால் நல்லது தான். 7 வருடத்திற்கு முன்பு எப்படி இந்த படத்தை எடுத்துள்ளார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருந்தாலும் இந்த தீபாவளிக்கு அண்ணாத்த, மாநாடு போன்ற மிகப்பெரிய படங்கள் வெளிவர உள்ள நிலையில், இந்த படம் தாக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.