மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக திரையரங்குகளில் வெளியான படம் “தலைவி”. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் நாயகியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இது மறைந்த முன்னாள் முதலவர் செல்வி ஜெயலலிதாவின் பயோ பிக் என்பதால் முதல் நாளே இந்த படத்தின் வசூல் ஏராளமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.

இது ஒரு பான் இந்தியா படம் என்பதால் மற்ற மாநிலங்களிலும் நல்ல ஒரு வசூலை எதிர்பார்த்தனர். முதல் நாள் சுமார் 20 முதல் 25 கோடி வரை இந்த படம் கலெக்ட் செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் வட இந்தியாவை பொறுத்தவரை இந்த படத்தின் மொத்த முதல் நாள் வசூல் 20 முதல் 25 லட்சம் என்று கூற படுகிறது.
அதே சமயம் தமிழகத்தை பொறுத்தவரை 80 லட்சம் வரை முதல் நாள் வசூல் இருந்துள்ளதாம். ஒட்டுமொத்தமாக பார்த்தல் 1 முதல் 1.5 கோடி தான் இந்த படம் முதல் நாள் கலெக்ட் செய்துள்ளது என்று கூறுகிறார்கள்.

பல நாட்களை கடந்து திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் கூட்டம் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழகத்திலேயே திரையருங்கள் பல நிரம்பாத நிலை உள்ளது. திரையரங்க வசூலை நம்பி தான் படத்தை OTTயில் கூட தாமதமாக வெளியிடலாம் என்று தீர்மானித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்துவிடலாம் என்று கங்கனா ரனாவத் எண்ணி இருந்தார். இந்த படத்திற்காக அவர் தமிழகம் வந்து படத்தை பிரமோட் கூட செய்திருந்தார். ஆனால் படத்தின் வசூல் இப்படி இருப்பதால் அவருக்கு இது நிச்சயம் ஏமாற்றமாக தான் இருக்கும்.