சூப்பர் சிங்கர் சீசன் 8 ரியாலிட்டி ஷோ விஜய் டீவியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் ஏராளமான திறைமைவாய்ந்த பாடகர்கள் பங்குபெற்று அசதிக்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு ரவுண்டு நடைபெற்றது. வைல்ட் கார்டு மூலம் யார் உள்ளே வருவார்கள் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அதன் விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த சீசனை பொறுத்தவர், முத்து சிற்பி தொடங்கி, ஏற்கனவே சூப்பர் சிங்கரில் பங்குபெற்றிருந்த அனு ஆனந்த வரை அனைவரும் சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தினாலும் நேரடியாக பைனலுக்கு சென்றது என்னவோ 4 பேர் தான். முத்து சிற்பி, பரத், அபிலாஷ், அனு ஆனந்த ஆகியோர் பைனலுக்கு சென்ற நிலையில் ஏற்கனவே எலிமினேட் ஆனவர்களுக்கு வைல்ட் கார்ட் ரவுண்டு நடந்தது.
இந்த வைல்ட் கார்டு ரவுண்டில் மிக சிறந்த பல பெற்பாமென்ஸ்களை நாம் பார்த்து ரசித்தோம். இதில் மக்களின் வாக்குகள் மூலமாகவும், ஜட்ஜஸ் மூலாமாகவும் இரண்டு போட்டியாளர்கள் பைனல் ரௌண்டிற்கு செலக்ட் ஆகி உள்ளனர்.
முதலாவதாக மக்களின் வாக்குகள் முலமாக தேர்வானவர் “ஸ்ரீதர் சேனா”. இவர் எலிமினேட் ஆனா போது நடுவர்களின் தீர்ப்பு குறித்த பல்வேறு விமர்சனங்கள் சூப்பர் சிங்கர் ரசிகர்களால் முன்வைக்க பட்டது குறிப்பிட தக்கது. அதன் தொடர்ச்சியாக பென்னி தாயால் கூட சில கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீதர் சேனாவை தொடர்ந்து நடுவர்களின் தேர்வாக மானசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆகையால் தற்போது மேலும் இரண்டு போட்டியாளர்கள் பைனலிற்க்கு சென்றுள்ளனர். இந்த முறை பைனல் 6 முனை போட்டியாக இருக்கப்போகிறது. இதில் வெற்றிபெறப்போகிறவர் யாராய் இருந்தாலும் அவர் திறமைசாலி தான்.