விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இதில் பலதரப்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழும் இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டில் இருந்து வந்தும் சிலர் கலந்து கொள்வதுண்டு.

அப்படி கனடா வாழ் ஈழத்தமிழரான ஜெசிக்கா, சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 4 இல் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்தார். சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட பொழுது அவருக்கு வயது 15. சூப்பர் சிங்கர் போட்டியில் கிடைத்த பணத்தை இலங்கை தமிழர் அனாதை இல்லங்களுக்கு நன்கொடையாக வழங்கிய பெருமை இவரை சாரும்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பொறுத்த வரை பாடல் மட்டும் இன்றி அதன் தொகுப்பாளராக இருக்கும் மா.கா.பா மற்றும் ப்ரியனாக செய்யும் காமெடிகளுக்கும் சில ரசிகர்கள் உண்டு. அப்படி தொகுப்பாளர்கள் அவரை ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என்று அன்பாக அழைப்பதுண்டு.

கிடைத்த பரிசு தொகை முழுவதையும் நன்கொடையாக வழங்கியதை தொடர்ந்து, நடிகர் சூரிய இவரை அழைத்து பாராட்டியது குறிப்பிடதக்கது. அதே போல சூப்பர் சிங்கரில் வெற்றியாளராக இருந்த முதல் இலங்கை தமிழர் இவர் தான்.

அப்போது சிறு பெண்ணாக பார்த்த இவர் தற்போது மளமளவென வளர்ந்துவிட்டார். அவர் தனது இன்ஸ்டாங்க்ராமில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் மாடர்ன் உடையில் அசத்தலாக உள்ளார். அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.