விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாங்கி. அவர் பேசுகையில் குழந்தை போல் பேசினாலும், பாடுகையில் குயிலாக மாறிவிடுவார். அந்த அளவிற்கு அவரின் குரலில் மாற்றம் இருக்கும். அதே போல அவர் இருக்கும் இடமும் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

சூப்பர் சிங்கரை தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பெங்கேற்று இரண்டு சீசனாக கலக்கினார். அதிலும் இரண்டாவது சீசனில் அஷ்வினோடு இனைந்து அவர் செய்த சேட்டைக்கு அளவே இல்லை. “அஷ்வினே” என்ற டைலாக் அந்த சீசனின் பிரபலமான டைலாகாகவும் இருந்தது.
அதே சமயம் அவர் புகழை அண்ணா என்று அழைப்பதும், புகழ் அவரை தங்கை என்று அழைப்பதும் உண்மையான அண்ணன் தங்கை போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிவிங்கி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் “ஆங்கர் சிவாங்கி” என்று எழுதி உள்ளது. அதே சமயம், இதே இடத்தில் 2 வருடங்களுக்கு முன்பு நான் ஒரு போட்டியாளராக பங்கேற்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான் ஆங்கர் ஆக போகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
அதோடு, பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5ல் பங்குபெற போவதாக செய்திகள் வெளியாகின. சிவாங்கியின் இந்த போட்டோவை பார்த்தால், பிரியங்கா பிக் பாஸ் செல்வது உறுதி என்பதாகவே தெரிகிறது. என்னினும் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.