பாண்டியன் ஸ்டோரீஸ் சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் தான் லட்சுமி அம்மாள். இவருடைய உண்மையான பெயர் ஷீலா. பாண்டியன் ஸ்டோர்ஸில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பின் மூலம் அனைவர் மனதையும் இவர் கவர்ந்தார். நாலு பிள்ளைகளுக்கு தாயாக நடித்த இவர், அந்த சீரியலில் பக்கவாதம் காரணாமாக வீல் சேரில் இருக்கும்படியான காதாபாத்திரத்தில் நடித்தார்.

சமீபத்தில் அந்த சீரியலில் அவர் இறந்துவிடுவது போல காட்சிகள் வெளியாகின. ஒரு வாரம் முழுக்க ஒளிபரப்பப்பட்டு அந்த காட்சிகள் TRPயில் அந்த சீரியலை முன்னிலைக்கு கொண்டு வந்தது. அதே சமயம் இந்த கதாபாத்திரத்தை ஏன் முடித்துவைத்தீர்கள், இவர் இன்னும் சில காலம் இருந்திருக்கலாமே என பலரும் தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர்.
அதே வேலையில் நடிகர் விக்ராந்தின் தாயார் தான் ஷீலா என்பதால், விக்ராந்த் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் விளைவாகத்தான் ஷீலாவின் கதாபாத்திரம் சீரியலில் முடித்துவைக்கப்பட்டது என்ற சில வதந்திகளும் சமூக வலைதங்களில் பரவியது. ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
சமீபத்தில் ஷீலா அளித்துள்ள பேட்டி ஒன்றில், தான் மீண்டும் விஜய் டிவி சீரியலில் நடிக்கப்போவதாக கூறியுள்ளார். விரைவில் அந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்றும் அந்த சீரியலில் நாயகியின் தாயாக தான் நடிக்க உள்ளதாகவும், நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்த சரண்யா அந்த சீரியலின் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் ஷீலா கூறியுள்ளார்.

இந்த தகவலின் மூலம் குழியாகி உள்ள ஷீலாவின் ரசிகர்கள், அருமை அம்மா மீண்டும் உங்களை விஜய் டிவி சீரியலில் காண ஆர்வமாக உள்ளோம். உங்கள் காலை பயண தொடரட்டும் என்று வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதே சமயம் சரண்யாவின் ரசிகர்களும் இந்த தகவலின் மூலம் பேரானந்தத்தில் உள்ளனர்.