விஜய் தொலைக்காட்சி தடுமாற்றத்தில் இருந்த காலத்தில் அதை நிமிர்த்தி நிக்கவைத்த நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் மிக முக்கியமானது என்றே கூறலாம். இப்படி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அந்த 3 மாதங்களில் விஜய் டீவியின் சீரியல் நேரங்கள் மாற்றப்படுவதுண்டு. அதே நேரம் சில சீரியல்கள் சில காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதும் உண்டு. இந்த பிக் பாஸ் சீசனும் அதற்க்கு விதிவிலக்கல்ல.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை சீசன் 1 முதல் தற்போது ஒளிபரப்பாக உள்ள சீசன் 5 வரை கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதே சமயம் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெரும் பல்வேறு போட்டியாளர்களுக்கு தனித் தனியாக ரசிகர்கள் உருவாவதுண்டு.
பிக் பாஸ் வீட்டிற்குள்ளே போட்டியாளர்களுக்குள் எப்படி போட்டி நிலவுகிறதோ, அதை விட அதிகமாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே போட்டி நிலவுவதை நாம் இதற்க்கு முன்பாக பார்த்து இருக்கிறோம். இந்த சீசனை பொறுத்தவரை இமான் அண்ணாச்சி, ப்ரியங்கா உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தினமும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பிற்காக 1 மணி நேரம் தேவை படுவதால், இரண்டு சீரியல்கள் தங்களது நேரத்தை விட்டுத்தர வேண்டி உள்ளது. அந்த வகையில் நடிகர் ரஞ்சித் நடித்துக்கொண்டிருக்கும் செந்தூர பூவே சீரியல் 3 மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் இது குறித்து விஜய் தொலைக்காட்சி எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
அதே சமையல் தொகுப்பாளினி ஜாக்லின் நடித்திக்கொண்டிருக்கும் தேன்மொழி பி.ஏ சீரியல் முடித்துவையாக்கப்பட உள்ளது. இது குறித்து ஜாக்லினே சமீபத்தில் ஒரு பெட்டியில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.