ஜோக்கர் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படாமல் இருந்தது. அதோடு அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு எதுவும் கிடைக்க வில்லை.

இந்த நிலையில் அவர் வெளியிட்ட போட்டோ ஷூட்கள் சில சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவியது. அதன் தொடர்ச்சியாக ரம்யா பாண்டியன் என்ற பெயர் பலராலும் உச்சரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த நிகழ்ச்சியியின் மூலம் அவரது பெயரும் புகழும் உயர்ந்தது. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் காமெடி ஷோ ஒன்றில் நடுவராக அவர் பங்குபெற்றார். அதனை அடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலதரப்பட்ட ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் திருமண கோலத்தில் இருப்பது போன்ற ஒரு புகை படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதை கண்ட அவரது ரசிகர்கள் இது என்ன மேடம் என்று புலம்பிய நிலையில், அந்த புகைப்படம் குறித்து விசாரிக்கையில், அது “இராமே ஆண்டாலும் இராவனே ஆண்டாலும்” என்ற படத்திற்க்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது.
ரம்யா பாண்டியனுக்கு ஒரு சகோதரி மற்றும் சகோதரர் உள்ளனர். ரம்யா பாண்டியனின் சகோதரியும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பாகத்தில் பல போட்டோக்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. அதே போல இவரது சகோதரரை நாம் பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது பார்த்திருப்போம்.