விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகம். அதில் வில்லியாக அர்ச்சனா நடித்து வருகிறார். அதில் தாம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து, தன் வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்க தன் கணவரிடம் சம்மதம் வாங்க அவரிடம் அன்பாக பேசி அவரை வெளியில் அழைத்துச்செல்ல சென்றுள்ளார். இதனை எதுவும் அறியாத செந்தில் தன் மனைவியை நம்பி ஆசையாக திருமண நாளன்று வெளியே போகலாம் என்று நினைத்து இருவரும் குற்றாலம் செல்கின்றனர்.
குடும்பத்தில் அனைவரிடமும் பொய் சொல்லிய அர்ச்சனா:
இதற்கிடையில் அர்ச்சனா அவரது குடும்பத்தாரிடம் தனது அம்மாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் அதனால் நான் என் அம்மாவை பார்க்க போவதாக பொய் சொல்லி குற்றாலத்திற்கு சென்றுள்ளனர்.
சந்தியாவின் சந்தேகம்
அர்ச்சனா கூறிய அந்த ஹாஸ்பிடல் பேர் எங்கேயோ கேட்டிருப்பது போலிருந்து சந்தியாவிற்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு அவர் ஏற்கனவே தனது மாமியார் மீது வழக்கு பதிந்து இருப்பது ஞாபகம் வர போலீசாரிடம் சென்று விசாரித்ததில் அது ஒரு ஈமெயில் ஐடியில் மூலமாக புகார் வந்ததை அறிந்த சந்தியா அர்ச்சனாவின் தங்கை பிரியாவிடம் விசாரித்ததில் உண்மை தெரியவருகிறது. அதுமட்டுமில்லாமல் அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரும் குற்றாலம் சென்றிருப்பது சந்தியாவுக்கு தெரியவருகிறது.

போலீசாரிடம் மாட்டிக் கொள்ளும் அர்ச்சனா
இந்நிலையில் அவர்கள் தங்கியிருக்கும் லாட்ஜில் திடீரென்று போலீசார் சோதனை இடுகையில் அர்ச்சனாவும் செந்திலும் விபச்சார வழக்கில் கைது செய்யப்படுகின்றனர். பிறகு இந்தப் பிரச்சனையில் இருந்து சந்தியா, செந்தில் மற்றும் அர்ச்சனாவை காப்பாற்றுகிறார். அது போல காட்சிகள் இன்றைக்கு ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ச்சையை கிளப்பிய காட்சிகள்
செந்தில் மற்றும் அர்ச்சனாவின் படுக்கையறை காட்சிகள் எல்லையை மீறும் அளவுக்கு இருப்பதாகவும், கட்டில் காட்சிகள் வரம்பு மீறுவதாவும் சோசியல் மீடியாக்களில் கிசுகிசுக்க படுக்கிறியாது.