தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்கள் சில காலத்திற்கு தான் உச்சத்தில் இருப்பார்கள். அதன் பிறகு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாத அளவிற்கு எந்த படங்களிலும் கமிட் ஆக மாட்டார்கள். ஆனால் இதற்க்கு விதிவிலக்காக இருப்பவர் ராதிதா. இவர் சினிமாவில் நடிக்க தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை பிசி தான்.

கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படம் மூலம் கடந்த 1978 ஆம் ஆண்டு தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ராதிகா. அதன் தொடர்ச்சியாக பலவேறு உச்சநட்சத்திரங்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியோடு சேர்ந்து இவர் நடித்த ஊர்காவலன் படத்தில், நடு இரவில் ரஜினியை எழுப்பி இட்லி சாப்பிட சொல்லும் காமெடி இன்றளவும் பிரபலம்.
சினிமாவை தொடர்ந்து ஒரு கட்டத்தில் சீரியலில் நடிக்க தொடங்கினார் ராதிகா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி என்ற சீரியல் பட்டி தொட்டி எங்கும் இவரை சித்தி என அன்போடு அழைக்கவைத்தது. கடந்த 2001 ஆம் ஆண்டு இவர் நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை மணந்தார்.

பொதுவாக ராதிகா ஒரு துணிச்சலான பெண்மணி என்று பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை மெய்ப்பிக்கும் வகையில் விமானத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை பற்றி மனோபாலா அவர்கள் சமீபத்தில் கூறி இருந்தார். அதன் விவரம் இதோ.
ஒரு சமயம் ராதிகா, மனோபாலா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் சிலர் ஒரு ஷூட்டிங்கிற்காக ஒரு இடத்திற்கு விமானம் மூலம் சென்றபோது, ராதிகாவின் பின் இருக்கையில் அமரிந்திருந்த ஒரு நபர் அவரின் கையை தொடுவது காலை தொடுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார். விமானம் தரை இறங்க 10 நிமிடமே இருந்ததால் பொறுமை காத்த ராதிகா, விமானம் திரை இறங்கியது அந்த நபர் வெளுத்துனார்.