Homeபொழுதுபோக்குமாட்டில் தானாகவே பால் கறந்து அதில் காபி போட்டு குடித்த நடிகை நிவேதா தாமஸ் -...

மாட்டில் தானாகவே பால் கறந்து அதில் காபி போட்டு குடித்த நடிகை நிவேதா தாமஸ் – வீடியோ

குருவி படத்தின் மூலம் தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் நிவேதா தாமஸ். சமீபத்தில் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக கூட இவர் நடித்திருந்தார். வெள்ளி திரையில் வருவதற்கு முன்பே சின்ன திரையில் இவர் “ராஜா ராஜேஸ்வரி” என்னும் தொடரில் அறிமுகமாகி இருந்தார்.

Nivetha thomas

ராதிகாவின் மகளாக அரசி சீரியலில் இவர் நடித்த போது இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தநடிகையாக இவர் வளம் வந்தார். தற்போது சினிமாக்களில் பிஸியாக இருக்கும் இவர், 2011ம் ஆண்டு வெளியான போராளி திரைப்படம் மூலம் தமிழில் முதன் முதலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வெளிவந்த “நவீன சரசாஸ்வதி சபதம்” படத்தின் மூலம் இவர் கதாநாயகியா அறிமுகமானார். விஜய், கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த பெருமை இவரை சாரும்.

Nivetha thomas

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் படங்களை நடிக்கிறார். இவர் அவ்வவ்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் ஒரு மாட்டு பண்ணைக்கு சென்று அங்குள்ள மாடு ஒன்றில் சுட சுட பால் கறந்து, அந்த பாலை கொண்டு கோபி போட்டு பருகிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)

அந்த விடியோவை பார்த்த பலர் அவரை வெகுவாக பார்ட்டி உள்ளனர். அதே சமயம் மாடு உதைக்க போகிறது, பார்த்து வேலை செய்யுங்கள் என்பது போன்று சிலர் கலாய்க்கவும் செய்துள்ளனர்.

சற்று முன்