விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் ஆர்.ஜெ செந்தில் நடிக்கும் சீரியல்களுக்கு எப்போதும் ஒரு தனி மவுசு இருப்பது உண்மைதான். அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் 250 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அவர் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். அந்த சீரியல் சம்பந்தப்பட்ட நடிகை ஒருவர் தற்போது கர்பமாக உள்ளார். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் மார்ச் 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. கொரோனா காலகட்டத்தில் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டது போல இந்த சீரியலும் நிறுத்தப்பட்டு தற்போது அதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது. இதன் முதல் பாகம் 579 எபிசோடுகள் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
இந்த சீரியலில் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் ஆர்.ஜெ செந்தில், மாயம், மாறன் என இரண்டு கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். அவருக்கு ஜோடியாக மஹா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வருகிறார். சமீபத்தில் ரக்ஷிதா இந்த சீரியலில் இருந்து விலகுகிறார் என்ற வதந்திகள் கூட உலாவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சீரியலில் முதல் பாகத்தை பொறுத்தவரை மாயன் என்ற கதாபாத்திரத்திற்கு ஆனந்தி என்ற ஒரு தங்கை உண்டு. அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் நடிகை வனிதா ஹரிஹரன். அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பது குறித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீரியல் நடிகர் கிருஷ்ணா தனது கமெண்டில் எலிக்குட்டிக்குள் ஒரு சிறிய குழந்தை உள்ளதா என்று செல்லமாக கூறியுள்ளார்.

வனிதா ஹரிஹரனை பொறுத்தவரை, லயோலா கல்லூரியில் படிப்பை முடித்த இவர், தெய்வமகள், பொன்னூஞ்சல், கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, பகல் நிலவு இப்படி பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். நாம் இருவர் நமக்கிருவர் சீரியலை பொறுத்தவரை இவரது திருமணத்தை மையப்படுத்தி மட்டுமே பல எபிசோடுகள் சென்றது குறிப்பிடத்தக்கது.