ஐந்து முறை தேசிய விருது பெற்ற ஒரு மிகசிறந்த நடிகராக உள்ளார் மோகன்லால். இவர் பெரும்பாலான படங்களை மலையாளத்தில் நடித்திருந்தாலும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் சில படங்களை நடித்துள்ளார். இருவர், உன்னைப்போல் ஒருவன், காப்பான் உள்ளிட்ட தமிழ் படங்களில் இவரின் நடிப்பு திறமையை பார்த்து நாம் ரசித்திருப்போம்.

அதே போல, மலையாள நடிகரான பிரித்விராஜும் மிக சிறந்த நடிகர், அதே சமயம் அவர் இயக்குநராகுவும், இருந்து வருகிறார். மொழி, சத்தம் போடாதே, ராவணன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் இவரின் நடிப்பை நாம் ரசித்ததுண்டு.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட ” லூசிபர்” படத்தை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. மோகன்லால் நாயகனாக நடித்த அந்த படத்தை பிரிதிவிராஜ் தான் இயக்கி இருந்தார். அவர் இயக்கிய முதல் படம் அது தான். அந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி அளவிற்கு வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து தற்போது லூசிபர் 2 படத்தையும் மோகன்லாலை வைத்தே இயக்க உள்ளார் பிரிதிவிராஜ். ஆனால் அதற்க்கு முன்பாக “ப்ரோ டாடி” என்ற படத்தை மோகன்லாலை வைத்தே இயக்கி வருகிறார் பிரிதிவிராஜ். இந்த படம் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், மோகன்லால் இவரின் திறமையை பாராட்டி இவருக்கு ஒரு அன்பு பரிசு வழங்கி உள்ளார்.

அந்த பரிசு என்னவென்றால் ஒரு அற்புதமான கூலர்ஸ் தான். அதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பிரிதிவிராஜ். அந்த கூலர்சின் விலை கிட்டத்தட்ட 1.5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.