ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் தனுஷ் இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நடிகர் தனுஷ் கடந்த 2002ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு காதல் கொண்டேன், பொல்லாதவன், யாரடி நீ மோகினி போன்ற பல படங்களில் நடித்தார். இதுவரை 46 திரைப்படங்களில் நடித்த அவர் 13 சைமா விருதுகளையும், ஒன்பது விஜய்டிவி விருதுகளையும், ஏழு ஃபிலிம்பேர் விருதுகளையும், 5 எடிசன் விருதுகளையும், 4 தேசிய விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். அவர் பல திறமைகளைக் கொண்டவர். அவர் ஒரு சிறந்த பாடகர், நடிகர் மற்றும் இயக்குனர் ஆவர். அவரைக் கண்டு ரஜினிகாந்த் மிகவும் பெருமிதம் கொண்டார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிறந்த பாடகர் மற்றும் நாட்டியத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவர். அதுமட்டுமில்லாமல் அவர் ஒரு சிறந்த இயக்குனரும் ஆவார். அவர் தன் கணவர் மற்றும் உலகநாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசனை வைத்து 3 என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படத்திலேயேமுத்தக் காட்சிகள் மிகவும் சர்ச்சையை கிளப்பியது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் திருமண முறிவு:
அதன் பிறகு தனுஷ் சில நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை கிளம்பியுள்ளது. அவர்களின் விவாகரத்துக்கு இதுதான் காரணமோ என்று கிசுகிசுக்ப்படுகின்றன.
ரஜினியின் வருத்தம்:
ஏற்கனவே தனது இளைய மகளான சௌந்தர்யாவின் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று வருத்தம் கொண்டிருந்தார் ரஜினி. பிறகு சௌந்தர்யா அவர்கள் விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இருவரும் இணைந்து வாழ்கின்றனர். தற்பொழுது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பிரிவு ரஜினிக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி:
இந்நிலையில் தனுஷை பிரிந்து ஐஸ்வர்யா தற்போது ஹைதராபாத்தில் ஒரு கதை விஷயமாக தங்கியுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் ஹைதராபாத்தில் ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று தனது புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.