நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தற்போது பல்வேறு யூடியூப் சேனல்களில் சினிமா நடிகர்கள் நடிகைகள் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தண்டோரா வாய்ஸ் என்னும் யூடியூப் சேனல் வழியாக, டார்ச்சர் செய்ததால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள் என்னும் தலைப்பில் ஓவிய குறித்து அவர் பேசி உள்ளார். இதனால் கடுப்பான ஓவியா அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அவர் அப்படி என்னவெல்லாம் பேசினார் என்று பார்ப்போம்.

களவாணி படத்தின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. படங்களில் நடித்து இவர் பிரபலம் அடைந்ததை காட்டிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு அடைந்த பிரபலம் தான் அதிகம். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது இவருக்கு ஆர்மி எல்லாம் கூட உருவாக்கப்பட்டது.
இப்படி இருக்க, சினிமா நடிகர்கள், நடிகைகள் குறித்த பல்வேறு விஷயங்களில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன். அவர் ஒரு வீடியோவில், ஓவிய மிகவும் ஓப்பனாக பேசுகிறார். நான் தண்ணி அடிப்பன், பப்பிற்கு செல்வேன், யாரை வேண்டுமானாலும் காதலிப்பேன், யாரோடு வேண்டுமானாலும் பாய் பிரன்டாக இருப்பேன் என்று கூறுகிறார். அது மட்டும் அல்லாமல் மகாபல்லிபுரத்தில் அவர் தங்கத்தை ஓட்டலே இல்லை என்று கூறும் அளவிற்கு ஓவியா இருக்கிறார்.
நடிப்பு துறையில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கலாம். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் மட்டுமே இருந்தால் அந்த நடிகைக்கு வேறு மாதிரி முத்திரை குத்திவிடுவார்கள். ஓவியாவுக்கு மார்க்கெட் இல்லாமல் போனதற்கு இது தான் காரணாம் என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
This is what non sexual women harassment!#WomensRights !
டார்ச்சர் செய்ததால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள் | Bayilvan Ranganathan… https://t.co/nyoBlA1UAq via @YouTube— Oviyaa (@OviyaaSweetz) September 14, 2021
அவரின் இந்த பேச்சு தற்போது ஓவியாவின் ரசிகர்கள் பலரையும் கடுப்பேற்றி உள்ளது. இதுதான் பாலியல் ரிதியாக அல்லாத வேறு வகையில் பெண்களுக்கு கொடுக்கும் தொல்லை என்று ஓவிய தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளார்.
அதே சமயம் ஓவியா பேன் கிளப் என்னும் ட்விட்டர் பக்கம், அவரை சிறையில் தள்ளவேண்டும் என்று பதிவிட்டிருந்தனர். அதற்கு ரிப்ளையாக, ஆம் நான் அதை ஆமோதிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார் ஓவியா.