1989 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கனகா. முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தையே இவர் சேர்த்தார் என்றால் மிகையாகாது.

அந்த படத்தை தொடர்ந்து அவர் எதிர்காற்று, அதிசய பிறவி இப்படி பல படங்களில் நடித்து வந்தார். தமிழில் மட்டும் அல்லாமல் மலையாள படங்களிலிலும் இவர் நடித்திருந்தார். ஆனால் கடந்த 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பது என்னவென்றால், நான் நடிப்பு துறைக்கு வந்து கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் ஆகி உள்ளன. இந்த 32 ஆண்டுகளில் திரைத்துறையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

மேக்கப், ஆடை, செருப்பு முதற்கொண்டு எல்லாமே தற்போது மாறியுள்ளன. நான் நடித்த காலத்தில் இருந்தது போல இப்போது எதுவுமே இல்லை. என்னிடம் யாரவது எப்படி நடிப்பது எப்படி ஒப்பனை செய்வது போன்ற விஷயங்களை கேட்டு அதே போல் செய்தால் அதை சிலர் பழையது என்று தான் கூறுவார்கள்.

10 வருடத்திற்குள் இருந்தால் தான் எதுவுமே புதிது என்று கூறுவார்கள். ஆகையால் நான் ஏதாவது செய்யவேண்டும் என்றால் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக்கொள்வதற்கு சில நாட்கள் தேவைப்படும். சின்ன வயதில் எளிதாக கற்றுக்கொள்ளலாம் ஆனால் எனக்கோ வயது 50. இந்த வயதில் கற்றுக்கொள்ள அதிக நாட்கள் தேவைப்படும்.

என் மனதில் தெம்பும், ஆர்வமும் இருப்பதால் நான் அனைத்தையும் மீண்டும் கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. சிலர் பேர், வயதான காலத்தில் இந்த ஆசை எல்லாம் இவர்களுக்கு வந்துவிட்டதே என்று குறை கூறினாலும் கூறுவார்கள். அனால் நான் நிச்சயம் கற்றுக்கொள்வேன் என்று அவர் கூறி உள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் நடிக்க வரப்போகிறாரா என்ற எண்ணம் பலரது மனத்திலும் எழ துடங்கி உள்ளது.