சினிமா துறையை பொறுத்தவரை நடிகர் நடிகைகளுக்கு வயதாகும் சமயத்தில் அவர்களின் வாரிசுகள் படத்திற்கு வருவதுண்டு. நடிகர்களை எடுத்துக்கொண்டால் கெளதம் கார்த்திக், சூர்யா, கார்த்தி, அதர்வா இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். நடிகைகளை எடுத்துக்கொண்டால் கீர்த்தி சுரேஷ், சுருதி ஹாசன், கார்த்திகா, துளசி இப்படி வரிசை நீண்டுகொண்டே போகும். அந்த வரிசையில் மேலும் ஒரு நடிகை இணைய உள்ளனர்.

1980களில் வெளிவந்த பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் தான் நடிகை ஜீவிதா. நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த “கடமை கண்ணியம் கட்டுப்பாடு”, விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த “நானே ராஜா நானே மந்திரி” போன்ற பல்வேறு படங்களில் இவரை நாம் பார்த்திருப்போம்.
இவர் நடிகையாக மட்டும் அல்லாமல், இயக்குனராகவும், தயாரிப்பாளராகுவும் இருந்துள்ளார். விக்ரம் நடிப்பில் வந்த சேது படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து இயக்கியது இவர் தான். இவருக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என்ற இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே தெலுங்கு படங்களில் நடித்துள்ளனர்.
தற்போது இளைய மகளான ஷிவாத்மிகா தமிழில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். நடிகர் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்துவருகிறார். அதே சமயம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாக உள்ள பெயரிடப்படாத ஒரு பாடத்திலும் இவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அசோக் செல்வன் படத்தை பொறுத்தவரை, முன்னணி நடிகைகளான ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி ஆகியோரும் நடிக்க உள்ளனராம். இந்த படத்தை ஆர் கார்த்திக் இயக்கவுள்ளார். இந்த படத்தில் 3 நாயகிகள் உள்ளதால் இது நிச்சயம் காதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



